அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!

வலைப்பதிவு காப்பகம்

வியாழன், 17 அக்டோபர், 2013

பெருமானார் (ஸல்) பொற்புதையல் !

 பெருமானார் (ஸல்) பொற்புதையல் !

மார்க்கமென்பது பிறர் நலம் நாடுவதாகும் என நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
பிராத்தனை வணக்கத்தின் சாரமாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
மனிதன் அவன் யாரை நேசிகின்றானோ அவனோடு (கியாம நாளில் ) இருப்பான் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
நிதானம்  இறைவனின் குணமாகும் . அவசரம் ஷைத்தானின் குணமாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
சபையில் பேசப்படுகின்ற விஷயங்கள்  அமாநிதமாகும் .(பாதுக்கப்பட வேண்டியவை ) என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
வெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
மது. பாவங்களின் பிறப்பிடமாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
முஃமின் என்பவன் அப்பாவியும் சங்கையானவனும் ஆவான் . பாவிஎன்பவன் மோசடி செய்பவனும் இழிவானவனுமாவான்  என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
அநியாயம் கியாம நாளில் இருள்களாக (அநியாயம் செய்தவனை) வந்தடையும் என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
உலகம் விசுவாசிகளுக்கு சிறைசாலை யாகவும் நிராகரிப்போருக்கு சுவர்க்க பூஞ்சோலையாக வும் இருக்கின்றது என ரசூல் (ஸல்) கூறினார்கள் .

வாங்கும் கையை விட கொடுக்கும் கை தான் சிறந்ததாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.

தொடரும்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

your comment is welcomed!